search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரியல் பூங்கா"

    • விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
    • மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூங்காவில் உள்ள 21 வயது உடைய விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அது உணவு உண்பதை குறைத்து சோர்வாக காணப்படுகிறது.

    இதை த்தொடர்ந்து வங்கப்பு புலியின் உடல்நிலையை பூங்காவில் உள்ள மருத்துவ குழு வினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பூங்காவில் பராமரிக்கப் பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளு தலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது. புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. இருப்பினும் வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக காணப்படுகிறது. மேலும் பூங்கா மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
    • தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் கான்பூரில் இருந்து 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டது. அவற்றை ஊழியர்கள் தனியாக கூண்டில் வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் கூண்டில் இருந்த 2 அனுமன் குரங்குகள் திடீரென பூங்காவில் இருந்து தப்பி சென்றுவிட்டது. அவை ஊரப்பாக்கம் மற்றும் மண்ணிவாக்கம் பகுதியில் சுற்றி வந்தது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அனுமன் குரங்குகளை கூண்டில் உணவு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் மண்ணிவாக்கம் பகுதியில் கூண்டில் உள்ள உணவை சாப்பிட வந்த ஒரு அனுமன் குரங்கை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மற்றொரு குரங்கு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதனை தொடர்ந்து தேடி வந்தனர்.

    இதற்கிடையே இன்று காலை அய்யஞ்சேரி பகுதியில் கூண்டில் வைக்கப்பட்டு இருந்த பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிடுவதற்காக தப்பி சென்ற மற்றொரு அனுமன் குரங்கு வந்தது. கூண்டுக்குள் நுழைந்ததும் அதன் கதவுகள் மூடியதால் அந்த குரங்கும் சிக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட அனுமன் குரங்கை வனத்துறையினர் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    வெளியில் தப்பி மீண்டும் பிடிபட்ட 2 அனுமன் குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க சிங்கம் இருக்கும் பகுதியில் குதித்த நபர், சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்
    • இந்த உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளன.

    திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க சிங்கம் இருக்கும் பகுதியில் குதித்த நபர், சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பார்வையாளர்களை உடனடியாக பூங்காவில் இருந்து வெளியேற்றி, சிங்கத்தை கூண்டில் அடைத்தனர்

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் டிக்கெட் எடுத்து உயிரியல் பூங்காவுக்குள் சென்று வனவிலங்குகளை நேரில் பார்த்து ரசிக்கலாம். இந்த பூங்காவில் வழக்கம்போல் இன்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் தடுப்புகளை தாண்டி இளைஞர் ஒருவர் உள்ளே குதித்தார். இதை அங்கிருந்த ஊழியர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதற்கிடையே அந்த நபர் சிங்கத்தின் அருகே சென்று ‛செல்பி' எடுக்க முயன்றார். இந்த வேளையில் துங்கார்பூர் என்ற பெயர் கொண்ட ஆண் சிங்கம் அவரது கழுத்தை ஆக்ரோஷமாக கடித்தது. இதனால் அவர் அலறினார். இதை பார்த்த ஊழியர் மற்றும் சக பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். ஆனால் சிங்கம் அவரை விடவில்லை. சிங்கத்திடம் இருந்து தப்பித்து மரத்தில் ஏற அந்த நபர் முயன்றார். ஆனால் சிங்கத்தின் பிடியில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து வனஊழியர்கள், உயிரியல் பூங்கா ஊழியர்கள், காவல்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சிங்கம் தாக்கி இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி பலியான நபர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் என்பதும், அவருக்கு வயது 34 என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் இன்று திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    • சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவுக்கும் மாற்றப்பட்டன.
    • 23 முதலைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா, மோயார் ஆறு, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றன.

    சென்னை:

    கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்தது. இதையடுத்து அப்போது முதல் அங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் கோவை வ.உ.சி. பூங்கா மூடப்பட்டது. இதையடுத்து அங்குள்ள பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்ற பிராணிகள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், பாம்புகள், ஆமைகள் போன்றவை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவுக்கும் மாற்றப்பட்டன.

    இடமாற்றம் செய்யப்பட்ட பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவற்றில் 51 ரோஸ் வளையம் கொண்ட கிளிகள், 27 அலெக்சாண்ரிட்ன் கிளிகள், 18 சிவப்பு மார்பக கிளிகள், 1 சரஸ் கொக்கு, 8 பாம்புகள், 3 இந்திய நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் 22 பிளாக் கைட்ஸ், 88 நைட்ஸ் ஹெரோன்ஸ், 30 போனெட் மக்காக்ஸ், 11 இந்திய மலைப்பாம்புகள், 26 புள்ளிமான்கள், 25 சாம்பார் மான்கள், 10 கோப்ரா பாம்புகள் ஆகியவை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட உள்ளன.

    23 முதலைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா, மோயார் ஆறு, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகள் மற்றும் பாம்புகள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதற்காக கூண்டுகள் அமைத்து மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பறவைகள் மற்றும் பாம்புகளின் மன அழுத்தத்தை குறைக்க அவற்றை ஏற்றி வந்த லாரிகள் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் ஒருமுறை நிறுத்தப்பட்டு சிறிது நேரம் கழித்தே மீண்டும் இயக்கப்பட்டன' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2019-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து விசாகப்பட்டினம் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.
    • தனது வாழ்நாளில் பெண் சிங்கம் பல லட்சம் மக்களுக்கு காட்சி அளித்து பரவசப்படுத்தியுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்திரா காந்தி வன உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 18 வயதுடைய மகேஸ்வரி என்ற பெண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது.

    வயது முதிர்வு காரணமாக பெண் சிங்கத்திற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து உயிரியல் பூங்கா கண்காணிப்பாளர் நந்தினி சலாரியா கூறுகையில்:-

    கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த மகேஸ்வரி என்ற பெண் சிங்கம் குஜராத்தில் உள்ள சக்கார் பாக் உயிரில் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து விசாகப்பட்டினம் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.

    வனப்பகுதியில் வாழும் சிங்கங்கள் 16 முதல் 18 வயது வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. தற்போது இந்த பெண் சிங்கம் தனது 19-வது வயதில் உயிரிழந்தது.

    தனது வாழ்நாளில் பெண் சிங்கம் பல லட்சம் மக்களுக்கு காட்சி அளித்து பரவசப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

    • அடைகாக்கும் போது அதன் முட்டைகள் மீது யாராவது கை வைத்தால் ஆக்ரோஷமாகிவிடும்.
    • மலைப்பாம்பின் அருகே ஏராளமான முட்டைகள் இருப்பதை காண முடிகிறது.

    எல்லா உயிர்களும் தனது குட்டிகளை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சாதாரணமாக முட்டையிடும் இனங்கள் அதை அடைகாக்கும் போது அதன் முட்டைகள் மீது யாராவது கை வைத்தால் ஆக்ரோஷமாகிவிடும். அவ்வாறு ஜேப்ரூவர் என்ற உயிரியல் பூங்கா காப்பாளர் தனது பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ராட்சத மலைப்பாம்பு அருகே செல்கிறார்.

    அந்த மலைப்பாம்பின் அருகே ஏராளமான முட்டைகள் இருப்பதை காண முடிகிறது. அதில், ஒரு முட்டையை ஜேப்ரூவர் எடுக்க முயலும் போது மலைப்பாம்பு கோபம் அடைந்து அந்த காப்பாளரை நோக்கி சீறுவது போலவும், அவரின் தொப்பியை கொத்த முயற்சிப்பது போலவும் காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ 5.54 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் மலைப்பாம்புவை லாவகமாக கையாளும் காப்பாளரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • பூங்கா ஊழியர்கள் சிறுவனை ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி வாகன டிரைவரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அலிப்பிரி வன உயிரியல் பூங்காவில் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

    திருப்பதி ராயல் நகரை சேர்ந்தவர் சுப்ப ரத்ன சுஷ்மா. இவர் தனது 3 மகன்கள் மற்றும் அவரது சகோதரர் மகனையும் உடன் அழைத்துக் கொண்டு உயிரில் பூங்காவிற்கு சென்றார்.

    உயிரில் பூங்காவில் விலங்குகளை சிறுவர்கள் ரசித்தனர். அங்கும் இங்குமாக சந்தோஷமாக ஓடியாடி விளையாடினர். சுப்ப ரத்ன சுஷ்மா அருகில் இருந்து சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்.

    சிறுவர்கள் விளையாடி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டனர். அங்குள்ள உணவகத்தின் வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேட்டரி கார் திடீரென சுப்ப ரத்னா சுஷ்மாவின் மகன் பிரணவ் (வயது 3) என்பவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனைக் கண்ட அவரது தாய் கதறி அழுதார். பூங்கா ஊழியர்கள் சிறுவனை ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவனின் தாய் எம்.ஆர்.பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி வாகன டிரைவரை கைது செய்தனர்.

    சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

    இனி உயிரியல் பூங்காவில் உள்ள பேட்டரி வாகனங்கள் 10 கிலோ மீட்டருக்கு பதிலாக 5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படும் என ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சோர்வாக உள்ள புலிக்குட்டிகளுக்கு வன உயிரியல் பூங்கா ஊழியர்கள் உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
    • கால்நடை மருத்துவர்கள் புலிக்குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    நந்தியாலா:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஆத்ம கூறு, கும்மடாபுரம் கிராம வனப்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு 4 பெண் புலி குட்டிகள் இருந்தன.

    இதனை வனத்துறை அதிகாரிகள் ஆத்மா கூறுவன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    குட்டி புலிகளை தாய் புலியுடன் சேர்க்கும் பணி முழு வீச்சில் நடந்தது. கும்மடாபுரம் நல்லமல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் சுமார் 70 டிராப் கேமராக்கள் உதவியுடன் 300 பணியாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் தாய் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களாக தாய் புலியை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தாயை விட்டு பிரிந்து உள்ளதால் புலிக்குட்டிகள் சரிவர உணவு அருந்தாமல் சோர்வாக காணப்படுகிறது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் 4 புலி குட்டிகளையும் நேற்று இரவு திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். சோர்வாக உள்ள புலிக்குட்டிகளுக்கு வன உயிரியல் பூங்கா ஊழியர்கள் உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

    மேலும் கால்நடை மருத்துவர்கள் புலிக்குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    விரைவில் தாய் புலியை கண்டுபிடித்து அதனுடன் குட்டிகள் ஒன்று சேர்க்கப்படும் என தெரிவித்தனர்.

    • பூங்காவில் வளர்க்கப்படும் சில விலங்குகள் அடிக்கடி பலியாவதாக புகார்கள் எழுந்தன.
    • விலங்குகளுக்கு காசா நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உயிரியல் பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் கரும்புலி, சிறுத்தை, புள்ளி மான்கள் மற்றும் அரிய வகை பாம்புகள் என ஏராளமான விலங்குகள் உள்ளன. இயற்கை சூழலில் விலங்குகள் வளர்க்கப்படுகிறது.

    இதனை பார்க்க கேரளா மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு செல்வது வழக்கம். இந்த பூங்காவில் வளர்க்கப்படும் சில விலங்குகள் அடிக்கடி பலியாவதாக புகார்கள் எழுந்தன.

    இதுபற்றி கேரள சட்டசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேரள கால்நடைதுறை மந்திரி சிஞ்சுராணி பதில் அளித்தார்.

    அப்போது திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட அரிய வகை விலங்குகளில் 64 விலங்குகள் இறந்துள்ளன. இவற்றின் சாவுக்கு காரணம் என்ன? என கால்நடை துறை டாக்டர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் விலங்குகளுக்கு காசா நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றின் உடல் உறுப்புகளின் மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த தகவல் தெரியவந்தது.

    இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் மட்டும் சிறுத்தை, கரும்புலி, புள்ளிமான் போன்றவை இறந்துள்ளது.

    இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இங்குள்ள மற்ற விலங்குகளுக்கு தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அவற்றின் உடல்நிலையையும் தினமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • இந்த ஆண்டு முதல் வனப்பரப்பை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • கிரீன் மிஷின் திட்டத்தின் கீழ் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    சேலம்:

    தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருக்கும் விலங்குகள் முறையாக பராமரிக்கப் படுகின்றனவா? சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் வனப்பரப்பை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கிரீன் மிஷின் திட்டத்தின் கீழ் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    குரும்பபட்டி வன உயிரியல் பூங்கா 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் அதனை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 31.73 ஹெக்ஆடேராக க உள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா 131.73 ஹெக்டேராக விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    கூடுதலாக வன உயிரினங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 24 வகையான உயிரினங்கள் தற்போது இங்கு உள்ளது.

    புலி, சிறுத்தை, கரடி, நீர்பறவை உள்ளிட்டவை இந்த ஆண்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளன. 2019-20 -ம் ஆண்டில் இரண்டரை லட்சம் பேர் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை பார்வையிட்டனர். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 87 ஆயிரம் பேர் மட்டும் பார்வையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் குரும்பபட்டி ஊரியல் பூங்காவுக்கு வந்துள்ளனர்.

    உயிரியல் பூங்காக்களை மேம்படுத்த மத்திய அரசு முன்வருவதில்லை. இருப்பினும் கல்விக்காகவே தமிழக அரசு உயிரியல் பூங்காக்களை மேம்படுத்தி வருகிறது. சத்தியமங்கலம் வனப்பகுதி உட்பட பல்வேறு வனப்பகுதி வெளியில் இருந்து யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனப்பரப்பை அதிகரிக்கும் போது நிச்சயம் வனவிலங்குகள் பொதுமக்கள் வசிப்பிடத்திற்கு வராது.

    மாவட்டத்திற்கு 3 சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே வனப்பகுதியில் தற்போது சாலைகள் போடப்படுகிறது. வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் கட்டாயம் அகற்றப்படும். முட்டல் ஏரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் உயிரியல் பூங்காவுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள கரடி சிறுவன் ஒருவனின் செய்கை பார்த்து திரும்ப செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #NashvilleZoo
    நியூயார்க்:

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாஷ்விலி உயிரியல் பூங்காவில் இயான் என்ற 5 வயது சிறுவன் தனது தந்தையுடன் சென்றிருந்தான். அப்போது அங்கிருந்த கரடி ஒன்று தண்ணீருக்குள் குதித்தது. இதை பார்த்த இயான் உட்பட பல சிறுவர்கள் ஆனந்தத்தில் குதித்தனர். இதை பார்த்த கரடியும் அவர்களுடன் சேர்ந்து குதித்தது.

    இயான் செய்ததை பார்த்து கரடி மீண்டும் குதித்து கொண்டே இருந்தது. இதனை இயானின் தந்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

    சிறுவர்களை பார்த்த மகிழ்ச்சியில் கரடியும் குழந்தைகளை போல் தண்ணீர் விளையாடியது. இது பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #NashvilleZoo
    ×